Showing posts with label Personal. Show all posts
Showing posts with label Personal. Show all posts

Thursday, November 13, 2008

பிறந்த நாள் வாழ்த்துகள்

என் அக்காள் ஒரு குட்டிசாத்தானை பெத்து வைத்திருக்கிறாள். அந்த அறுந்த வாலினை மெய்பவனாக என்னை இருக்க சொல்ல.. இரண்டாவது தினமே மறுத்து ஓடிவந்துவிட்டேன் இங்கே..


ஆயிரம் கேள்விகள் ... ஒன்னாச்சும் நாம ஸ்டான்டர்ட்-க்கு இருக்குதா? எங்க இருந்துதான் கத்துக்கிறாங்களோ தெரியல. பார்த்த உடனேயே தெரியும் போலிருக்கு இவன் tubelight .


பார்த்தா அப்படி தெரியுதா?





இதுவரைக்கும் பிறந்த, இனிமே பிறக்க போகின்ற எல்லா குழந்தைகளுக்கும் Happy Birthday வாழ்த்துகள் .இன்று குழந்தைகள் தினம் !

Friday, January 25, 2008

Once again musings...

First thing first...

நம்ம பொன்னரசி , சில பல காத்திருப்புகளுக்கு பிறகு கடைசியா இன்னைக்கு வேலைல சேருறாங்க அவங்களுக்கு என்னோட மனமார்ந்த பாராட்டுகள். ஒழுங்க ஆபீஸ்ல நல்ல புள்ளையா அம்மா கொடுத்த தத்து மம்மு சாப்பிடுகிட்டு, சமர்த்தா போய்ட்டு வரணும். அந்த பொண்ணு கிள்ளுனா, இந்த பையன் ஜடைய புடிச்சு இழுத்தான்னு சொல்லிக்கிட்டு அழுதுகிட்டு இருக்ககூடாது . நல்ல பொண்ணா, அழகா கொடுத்த வேலைய செஞ்சு (அதுவே பெருசு உன் கம்பெனி-ல) நல்ல பேரு எடுக்கணும். அடுத்தவாட்டி ஊருக்கு வரச்சே கிலுகிலுப்பையும், கமர்கட்டும் வாங்கியாறேன். :D

"எந்தன் வானமும் நீ தான் , எந்தன் பூமியும் நீ தான்" பாட்டு கேட்டுருக்கீங்களா? கேட்டு பாருங்க.. சும்மா சூப்பர் மெலடி. வார்த்தைங்க கூட நல்லா இருக்கு. மஹதி , ஹரிசரனும் பாடி இருக்காங்க.

BTW, yenga dabba company-la Blogger again Blocked.... So I can't blog/comment as frequently as earlier (idhuku munadi maatum ozhunga panniyanu keka kudathu :D) Rest in next post...

Friday, January 4, 2008

மனம்விட்டு சில வார்த்தைகள்...

"டேய்! காயத்ரிக்கிட்ட பேச மாட்டேன்னு சொன்னியாமே? என்னடா சண்டை உங்களுக்குள்ள?" அம்மா கத்தினாள். " நீ சும்மா இரும்மா. இதுல தலையிடாதே. இப்பவே அடக்கி வச்சாதான் போற இடத்துல ஒழுங்க இருப்பா". அம்மாவை அடக்கினான்.

"இனிமே நான் சண்டை போட மாட்டேன்டா , என்கிட்ட பேசுடா. நீ சாரி கூட கேக்க வேண்டாம்". கெஞ்சினாள் அவள். காதில் விழாதது போலே கிளம்பி சென்றான் அவன்.

சில நாட்களுக்கு பிறகு, நண்பர்களுடன் கல்லூரி சுற்றுலாவில்,

" என்னடா எங்ககிட்டலாம் பேச நேரமே கிடைக்காதா உனக்கு? எப்பவுமே அவ பின்னாடியே சுத்துற" நண்பனிடம் கத்தினான் அவன். " டேய் சத்தமா பேசாதடா. அவ காதுல விழ போகுது" பதறியப்படியே சொன்னான் நண்பன். " கேட்டா கேக்குது. அவளுக்கு என்னமோ பயப்படுற?" மீண்டும் சீண்டினான் அவன்.

"அவனை எதுக்கு இப்போ சீண்டுற? எதுவா இருந்தாலும் என்கிட்ட நேரா கேளு?" அவனை மடக்கினாள் அவள். நண்பன் பேசாமல் நின்று கொண்டிருந்தான். " நான் உன்கிட்ட ஒண்ணும் பேச தேவை இல்ல" - அவளிடம் சொல்லிவிட்டு , " பெரிய பருப்பு மாதிரி வந்த்துட்டா" என்று முனும்முனுத்தான். கேட்டுவிட்டது அவளுக்கு. பொங்கிய கண்ணீரை மறைத்து கொண்டே பேருந்தில் சென்று அமர்ந்தாள்.

அன்று இரவு, "டேய் என்னடா நீ.அவகிட்ட போய் அந்த மாதிரியா பேசுவ? . பாவம்டா அவ. " - வருந்தினான் நண்பன். " என்னடா ரொம்ப தான் பரிஞ்சு பேசுற?" - எகத்தாளித்தான் அவன். " இத்தன நாள் நம பழகிருகோம், என்னைவிட அவ தான் பெருசா போய்ட்டால்ல இப்போ" இரக்கமில்லாமல் நட்ப்பென்னும் உரிமையை கொண்டாடினான், அதன் பெருமை தெரியாதவன்.

" டேய் அதுக்கில்லடா ." - பேச வாயேடுத்தவனை அடக்கினான். " உனக்கு நான் வேணுமா இல்ல அவ வேணுமான்னு முடிவு பண்ணிக்கோ" - கர்ஜித்து சென்றான்.

இரண்டு நாட்கள் ஓடியது. வகுப்பறையில் நண்பனும் அவளும் பேசிக்கொள்வதாக தெரியவில்லை. அவனுக்கு உள்ளுர சந்தோஷமாக இருந்தது. என்றாலும் அவர்களை பிரித்தது தப்போ என்று தோன்றியது. நண்பனின் வாடிய முகம் அவனையும் வருத்தியது.

முடிவ்வெடுதவனாய் அவளிடம் சென்றான். " உன்கிட்ட கொஞ்சம் பேசணும். class முடிஞ்சதும் wait பண்ணு." சொல்லிவிட்டு நகர்ந்தான். "டேய் என்னடா பேச போற. இன்னும் எதுவம் குட்டைய்ய குழப்பாத, please. " கெஞ்சினான் நண்பன். அவனை ஒருமுறை உற்று பார்த்துவிட்டு சென்றான் அவன்.

மாலை, அவள் வகுப்பறையில் காத்திருந்தாள். " உனக்கு அவன் எப்படின்னு எனக்கு தெரியாது, ஆனா அவன் எனக்கு more than a friend. I;m bit possesive when it comes to my friendship. இதுவரைக்கும் நான் யார்கிட்டயும் போய் மன்னிப்பு கேட்டதில்லை. ஆனா என்னால அவன் கஷட்டப்படுறதை நான் விரும்பல. நான் எதாச்சும் தப்பா பேசிருந்தா என்ன மன்னிச்சுடு." சொல்லிவிட்டு அவளின் பதிலை எதிர்பார்க்காமல் வெளியே சென்றான்.

" டேய். thanks -டா. எனக்கு நீங்க இரண்டுப் பேருமே ஒன்னு தான் " நன்றி சொல்லிகொண்டிருந்த நண்பனை புறம் தள்ளி ஏதோ உணர்ந்தவனாய் hostel- லை நோக்கி ஓடினான்.

" Hello! சாரி அக்கா ! "பேச முடியாமல் அழுதான் அவன். "டேய் ஏன்டா அழற ஒண்ணும் இல்லடா ராஜா. விடு நீ தான சண்டை போட்ட. அழாதே. நீ பேசியதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு." போனில் சமாதானம் சொன்னாள் அவன் அக்கா.

Tuesday, December 25, 2007

Looking Back...

First thing first; என் அருமை கிறிஸ்துவ நண்பர்களுக்கு என்னோட இனிய மனமார்ந்த Christmas நல்வாழ்த்துகள் .


ரொம்ப நாலா எந்த போஸ்டும் போடலியேனு நம்பள மறந்திட கூடாதுனு இந்த post போடுகிறேன். இப்போ நாம என்ன பண்ணலாம் , Top movies, songs இதெல்லாம் , SUN, VIJAY, RAJ-nu குத்தகைக்கு எடுத்திடாங்க. என்ன பண்ணலாம் யோசிச்ச போது இந்த 2007 -ல பெருசா நம்ம செஞ்சி கிழிச்சது என்னனு ஒரு அலசு அளசலாம்னு தோணுச்சு . இதோ உங்களுக்காக , 2007 ஒரு பார்வை.






  • இந்த வருஷத்தோட highlight, second innings of my career life. B-School முடிச்சு 3 months வெட்டியா OB அடிச்சதுக்கு பிறகு , got my Joining Date. எப்படியோ பிள்ளையருக்கு உடைச்ச தேங்காய் வீணாப்போகாம எனக்கு பிடிச்ச Dept-லேயே என்னை போட்டாங்க. அது வரைக்கும் சந்தோஷம் .


  • எத்தனையோ தடவ நான் அம்மாவுக்கு surprise கொடுத்திருந்தாலும் , இந்த varusha தீபாவளி was really a great surprise for her. I still remember her experssion on face when I gifted the saree to her. அதுக்கு விலையே இல்லீங்க.


  • வாழ்க்கைல நாம miss பண்ணுறது எவ்வளவோ இருந்தாலும் , college days என்னைக்குமே ஒரு புது அனுபவம் தான். Fortunately I had an oppurtunity to enjoy once again. மொத்த college staffs & juniors எங்களுக்கு கொடுத்த வரவேற்பு , I just can't express in words. My B-School gave entirely different perspective of learning from what I saw in Engineering.


  • இந்த வருஷத்தோட total failure was when my sister came to bangalore. அவள் சொல்லும் போது எல்லாம் நம்பாம எங்க வீட்டு குட்டிச்சாத்தான் will take care for 3 days in பெங்களூர் சவால் விட்டு மாட்டிக்கிட்டது . பசங்க குறும்பு பண்ணுறது சகஜம் , ஆனா குறும்பே பையனா பொறந்த என்ன பண்ணுறது ? முடியலடா சாமி!


  • எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற park-ல உர்காந்துகிட்டு என்னோட friend-க்கு ஓடி போய் கல்யாணம் பண்றதுக்கு பெருசா idea போட்டு கொடுத்தது . Atlast அந்த பொண்ணு வீட்ல சொன்ன மாப்பிள்ளையை கட்டிகிட்டு US போய்ட்டா , நம்ம பையன் கொஞ்ச நாள் தாடி வச்சிட்டு , இப்போ அடுத்த figure set பண்ண கிளம்பிடான் . Idea கொடுத்த நான் தான் இப்போ இந்த மாதிரி மொக்க post போட்டுகிட்டு இருக்கேன்.


  • இந்த வருஷத்தோட இன்னொரு highlight, visible blog எழுத ஆரம்பிச்சது. Gmail id கிடைச்ச சமயத்துல எனக்கு நானே நிரைய invitation அனுப்பி create பண்ணின user id வச்சி நிரைய blog open பண்ணிருக்கேன், but GUNDUMAMA-வுக்கு இருக்கிற மவுசு வேற எந்த id-கும் இல்ல. Thanks to sriprasad, then my classmate now my collegue for choosing a good nick name for me :) எனக்கே சொல்லுறதுக்கு கொஞ்சம் கூச்சமாதான் இருக்கு , but to say in short GUNDUMAMA RETURNS :D


  • ஒரு விஷயத்த தொடங்கிறதுக்கு அதை பத்தி முழுசா தெரியனும்னு அவசியம் இல்லை, you should be bold enough to try it out - அப்பிடினு சொல்லி , மொத்த server-யும் என்கிட்ட கொடுத்து, you can bring up the system easily-னு encourage பண்ணின என்னோட boss துணிச்சல். கொஞ்சம் miss ஆகிருந்தாலும் 40K total loss. But என் மேல வச்ச நம்பிக்கைய காப்பாத்தி கொடுத்ததை நினைச்சு நான் சந்தோஷபடுகிறேன்


  • ரொம்ப மாசமா சாட்டிங்களில், mailலயுமே பேசிக்கிட்டு இருந்த friends கூட phone பண்ணி பேசுற அளவுக்கு upgrade ஆனது. Waiting for 2008 to create a platform to meet. Are you hearing my dear?? ;)


இப்படி எவ்வளவோ எழுதலாம் , ஆனா நீங்க இப்பவே களைச்சிப் போய்டீங்கனு தெரியுது So stop பண்ணிக்குவோம்.



திரும்பி பார்த்தால் இந்த வருஷம் எனக்கு ஒரு happiest year-னு தான் சொல்லணும் . But எதாச்சும் சாதிச்சனானு கேட்டா nothing-nu மனசு சொல்லுது . ஒண்ணு நிச்சியம் , இந்த வருஷம் நான் அதிகமா கோபப்படலை , நிரைய பக்குவப்பட்டிருக்கேன் . Created நிரைய new friends. எல்லோருக்கும் என்னால நல்லது செய்யமுடியாது , but அவங்களுக்காக நான் வேண்டிக்கலாம்நீங்களும் உங்க மனச open பண்ணி வைங்க. Just ஒரு smile , it make a sweet morning. எத்தன பேரு உங்க office security கிட்ட good morning சொல்லி இருக்கீங்க? எத்தன பேரு உங்களுக்காக lift-a நிறுத்தி வச்சவருக்கு நன்றி சொல்லிருகீங்க? Just try. ஒரு Thanks, ஒரு good morning நீங்க குறைஞ்சிட மாட்டீங்க . இதுதான் இந்த வருஷத்துக்கான தத்துவம்.



May this 2008 brings peace and prosperity to this world. Wishing everyone a Happy New Year !

Thursday, December 13, 2007

மனதோடு தான் நான் பேசுவேன்...


பழைய ஆனந்த விகடனை புரட்டியபோது கிடைத்தது. கொஞ்ச நேரம் எதுவும் யோசிக்க முடியாமல் புத்தகத்தையே வெறித்து பார்த்தேன் - சட்டேன்று தொலைபேசி அடித்தது.

" நல்லா இருக்கியாடா?" பேசியது என் அக்கா. நம்ப முடியவில்லை என்னால்.

Some sort of ESP??? ;)

Tuesday, November 20, 2007

காதோடு தான் நான் பேசுவேன்...

" முதல் மழை என்னை நனைத்ததே" " அக்கம் பக்கம் யாருமில்லா" " மேகம் மேகம் என் காலில் மிதக்கிறதே" இப்படியான எந்தவித பாட்டும் இல்லாமல் சாதாரணமாக "ட்ரிங் ட்ரிங்" என்றே அவளது தொலைபேசி ஒலித்தது.

அதுவும் நன்றாகவே இருந்தது.

"ஹலோ யார் பேசுறது? " அவள் தான். குரல் தேனாக என்னுள் இறங்கியது.

" எப்படி இருக்கிற பிசாசே" .

"ஹே! குண்டுமாமா. எப்படி இருக்கிற?. வேற நம்பர் வருது? கேடி நம்பர் மாத்திட்டியா? "

" yup . இது என்னோட புது நம்பர். நோட் பண்ணிக்கோ." " Then எப்படி இருக்க? என்ன பண்ணுற? . எப்போ Joining Date எதாச்சும் தெரிஞ்சுதா?"

" இல்லபா. மாத்தி மாத்தி சொல்லுராங்க. யாருக்கும் கரெக்டா தெரியல. May be in November. "

" Oh! good. Then what doing now?"

" சும்மா தான் இருக்கேன். ஹே என்னால நம்பவே முடியல. உங்களோட voice ரொம்ப familiar-a இருக்கு. " - ஆச்சர்யாபட்டாள்

" நிஜமாவா. Even I feel the same. சரி அப்பா அம்மா எல்லாரும் எப்படி இருக்காங்க? "

"எல்லாரும் ரொம்ப fine . அம்மா எப்படி இருக்காங்க? மருமகன் என்ன சொல்லுறான்? "

" All are fine here. How are you feeling now?"

" You still remember that. Thanks. கொஞ்சம் வலி இருக்குது but okay. டாக்டர் கிட்ட திரும்ப போகணும்." - சிரித்தாள்.

மெல்ல நானும் சிரித்தேன். நீண்ட நாட்களுக்கு முன்பு பேசிய நண்பனிடம் மீண்டும் பேசியதை போன்ற உணர்வு.

அவள் பேசினாள். நான் கேட்டேன் கேட்டு கொண்டே இருந்தேன்.

சுமார் 42 நிமிடங்கள் கடந்தன. நிறைய பேச நினைத்தேன் ஆனால் பேச ஒன்றுமே இல்லாதது போன்ற ஒரு உணர்வு. But I felt contented after speaking to her.

Have you come across something like this ever? I had a couple of times earlier, once with my closest friend and other time with my mom. But both the time I was speaking less and listening more. Same happened this time too :)