Sunday, July 27, 2008

என்று தணியும் இந்த கொலைவெறி?

இன்னுமொரு பயங்கரம். காஷ்மிரை துளைத்தது பத்தாதென்று இந்தியாவின் மற்ற பாகங்களையும் சல்லடையாக்க புறப்பட்டது போல் தெரிகின்றது.
இம்முறை இந்த கொடுமையை பக்கத்திலிருந்து உணர முடிந்தது என்னால். ஆனால் எதுவுமே செய்ய முடியாததை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.
செய்தது யாராக இருப்பினும் முதல் பழி இஸ்லாம் நண்பர்கள் மீதே விழும். அதுவும் இந்த முறை பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் நடப்பது இன்னும் அவர்கள் வாய்க்குள் அவல் இட்டது போல் ஆகிவிட்டது.
இடையினில் மாட்டிக்கொண்டு விழிப்பது இஸ்லாமிய நண்பர்களே. நேற்று வெளியே சென்ற பொழுது ஒரு இஸ்லாமிய பெரியவரை சந்தேகமாக பார்த்த விழிகள் தான் எத்துனை எத்துனை? எங்கோ ஒரு கயவன் வைத்த குண்டினால் நாட்டில் உள்ள எல்லோரையும் சந்தேகத்தோடு பார்க்க வேண்டிய நிலைமை.
எனக்குள்ளே ஒரு சந்தேகம் - இது எல்லாமே தானாகவே நடகிறதா இல்லை நம் நாட்டில் உள்ள போக்கிரிதனமான அரசியல்வாதிகளின் சில்மிஷமா? எதுவாக இருப்பினும் இது நிறுத்த படவேண்டும். தமிழ்நாடு மட்டும் அல்ல இந்தியா முழுவதுமே அமைதி பூங்காவாக மாறவேண்டும்.

No comments:

Post a Comment