Thursday, January 17, 2008

31st Chennai Book Fair

சென்ற வாரம் சனிக்கிழமை சென்னையில் நடந்த புத்தக கண்காட்சிக்கு நான் அம்மா மற்றும் என் மாமா பெண்ணுடன் சென்றிருந்தேன். இன்னும் மக்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கம் மாறவில்லை என்பதற்கு சான்றாக கௌன்டரில் டிக்கெட் வாங்கவே பெரிய வரிசை.

வழக்கம் போல ஒவ்வொரு stall ஏறி இறங்கி பிடித்த புத்தகங்களில் தேடி எடுத்து படித்தேன். முதலில் வாங்கிய புத்தகம் தேவனின் ஸ்ரீமன் சுதர்சனம். (அல்லியான்சே பதிபகதர்) . புத்தகத்தை வாங்கி அங்கேயே படிக்க ஆரம்பித்துவிட்டேன். நடுவில் அங்கேயும் இங்கேயுமாக மக்கள் செல்ல, நான் ஒரு ஓரமாய் கால் வலிக்க நின்று பாதி புத்தகத்தை படித்து முடித்தேன். இதற்கே 45 நிமிடங்கள் ஓடிவிட்டதால், பின்னர் படித்துக்கொள்ளலாம் என்று அந்த புத்தகத்தை வாங்கி வந்தேன்.

கண்காட்சியில் ஒரு வசதி என்னவென்றால், நாம் படிக்கும் புத்தகத்தை வாங்கியே தீர வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில புத்தகங்களை நான் அங்கேயே படித்து முடித்துவிடும் அளவுக்கு சிறியவை, அதை வாங்கி கொண்டு போய் என்ன செய்ய? அதனால் நான் ரொம்ப selective.

கிட்டதட்ட 4 மணி நேரம் செலவிட்ட பிறகு சில புத்தகங்களை வாங்கினேன். இதோ என்னோட இந்த வருஷ collection,

  • 18 வது அட்சய கோடு
  • ஸ்ரீமன் சுதர்சனம்
  • அழகர்சமியின் குதிரை
  • கள்ளிகாட்டு இதிகாசம்
  • அமெரிக்காவில் கிச்சா
  • கே ஜி பி
  • Autobiography of Gandhi
  • சிவமயம்
  • ட்விஸ்ட் கதைகள்


என்ன என்னொட collections எப்படி இருக்கு? , உங்களோட collections அனுப்பி வைங்க . அடுத்த வாட்டி போகும் போது மறக்காம வாங்கி படிக்கிறேன்.

3 comments:

  1. அருமை சார், உங்கள் collection சுப்பர். நான் இதுல் week.
    Let me see if i could collect some from ur list and let u know.

    ReplyDelete
  2. when is the last date for the fair? might be at chennai during the last weak of jan.

    ReplyDelete
  3. Sivamayam naanum vangnen..But oru kathaya padichu name manasula pathiyarathukulla :( podum podum nu ayduchu!

    Mathathu padichitu sollungooooooo

    ReplyDelete